செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

Oct 12, 2024 01:35:18 PM

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் குழந்தைகளின் நாவில் தேன் தொட்டு வைத்து நெல்மணிகளில் அ எழுத வைத்து புதிதாக பள்ளிகளில் சேரவிருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வித்யாரம்பம் செய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள வனமாலீஸ்வரர் மற்றும் சரஸ்வதி தேவி கோயிலில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் அர்ச்சகர்கள் தங்க எழுத்தாணிக் கொண்டு தேனில் நனைத்து குழந்தைகளின் நாவில் எழுத்துக்களை எழுதினர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கலைமகள் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தாடை அணிந்து மாலை அணிவித்து மடியில் அமர வைத்து அரிசியில் விரலி மஞ்சள் மூலம் அ என எழுதி கல்வியை துவங்கினர்.

 

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேனில் தொட்டு குழந்தைகளில் நாவில் வைத்த அர்ச்சகர்கள் அவர்களின் கையை பிடித்து தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயரை அரிசியில் எழுதினர்.

 

சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் தங்களது பெயரை அரிசியில் எழுதினர். தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்தனர்.

 

திருப்பூர் - கல்லூரி சாலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எழுது பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


Advertisement
சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் ஓராண்டில் ரூ.1.50 கோடி வருவாய் என நிர்வாகம் அறிக்கை
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement