செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Oct 20, 2024 09:03:12 AM

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் 5 வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பசி மயக்கத்தில் காரை ஓட்டியதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற இன்னோவா கார் சங்கம் தியேட்டர் சிக்னல் சந்திப்பில் இருந்து தாறுமாறாக ஓடியது. சாலைகளில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் கண்ட இதர வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திய காரை துரத்தி வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே மடக்கி பிடித்து காருக்குள் இருந்த கார் உரிமையாளர் பாரஸ்மால் என்பவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த ரமணி விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்களுக்குப் பயந்து தப்பிஓடினார். பின்னர் காவல்துறையிடம் அவர் சரண் அடைந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி பக்கவாதம் ஏற்பட்டு பின் சரியாகி தற்போதும் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கார் ஓட்டுனர் தெரிவித்தார் . இந்த நிலையில்  மதிய உணவு சாப்பிடாமல்  மாலையில் கார் ஓட்டி வரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு நிதானிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டதாகவும் ஓட்டுநர் ரமணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விபத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் சிக்கி படுகாயம் அடைந்த ஏழு நபர்களை பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அவர்களில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவர்உள்பட 3 பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement