செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மருமகளுக்கு சாப்பாட்டில் விஷம் சயனைடு வைத்த மாமியார்.. 75 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி ?

Sep 02, 2024 10:04:53 PM

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் மருமகளுக்கு, சாப்பாட்டில்  விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை 75 நாட்களுக்குப் பின் உதகை காவல் துறையினர் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சமது மனைவி நிலாபர் நிஷா தம்பதியரின் மகள் ஆஷிகா பர்வீனுக்கும் உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், ஜபருல்லா தம்பதியரின் மகன் இம்ரானுக்கும் 2021 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்துவதாக யாஷிகா பர்வின் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி ஆஷிகா பர்வீன் வலிப்பு ஏற்பட்டு சமையலறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்பு அவரை உதகை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறியதால்,
சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், பிரேதத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தங்கள் மகள் சாவில் மர்மம் உள்ளது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து உடற் கூறாய்வு செய்யப்பட்டு கடந்த வாரம் முடிவுகள் வந்தன. இதில் பெண்ணிற்கு சைனைடு விஷம் கொடுத்துள்ளதாகவும், பெண்ணின் கழுத்து, தோள்பட்டை ,விலா எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று (சனிக்கிழமை) காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடரந்து ஆஷிகா பர்வீனுக்கு சாப்பாட்டில் சயனைடு விஷம் வைத்து கொன்றதாக மாமியார் யாஸ்மின், அவரது உறவினர் காலீப் , ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான் , கணவரின் தம்பி முக்தார் ஆகிய நான்கு பேரை உதகை போலீசார் கைது செய்தனர்.

ஆஷிகா பர்வீனின் மாமியார் யாஷ்மீனுக்கு 49 வயதாகும் நிலையில் அவரது உறவினரான காலீப் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்பு, யாஸ்மினும் காலீப்பும் ஒன்றாக இருந்ததை ஆஷிகா பர்வீன் பார்த்த நிலையில், இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவாரோ என்ற காரணத்தினால் ஆஷிகா பர்வீனிற்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

யாஸ்மினுடன் தகாத உறவில் இருந்த காலீப் ன் வீடு நகைகடைகள் அதிகம் உள்ள பகுதியில் இருப்பதால் நகைகள் உருக்க சைனைடு பயன்படுத்துவதை அறிந்து நகைக்கடையில் இருந்து சைனைடை யாருக்கும் தெரியாமல் எடுத்தாக காலீப் கூறிய நிலையில் அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?
உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement