செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

“மேலயா கைய வைக்குற”..?..அரசு பேருந்து ஓட்டுநரின் தரமான ஆக்டிங் சம்பவம்..!

Aug 23, 2024 07:39:06 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வழிவிட சொல்லி ஹாரன் அடித்த அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு புறநகர் பேருந்து ஒன்று ஒட்டன்சத்திரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுனர் கார்த்திகேயன்இயக்கினார். பேருந்துக்கு முன்பாக வழி விடாமல் சென்ற இருசக்கர வாகனங்களை விலகிபோகச்செய்வதற்காக ஓட்டுனர் கார்த்திகேயன் ஹாரன் அடித்ததால் ஆவேசம் அடைந்த இரு சக்கர வாகன ஓட்டிகள், சேனன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை மறித்து தகராறு செய்து ஓட்டுனர் கார்த்திகேயனை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

அடி விழுந்ததும் பதிலுக்கு மல்லு கட்டாமல் சாலையில் மயங்கி விழுந்தது போல படுத்துக்கொண்டதால் , உடனடியாக 108 ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு ஓட்டுனர் கார்த்திகேயனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஓட்டுனரை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்து பயணிகள் நடுவழியில் தவித்து நின்றனர். இதையடுத்து ஆவேசம் அடைந்த பயணிகள் , பொதுமக்கள், ஓட்டுனரை தாக்கிய 4 பேரைப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தப்பிச்செல்ல முயன்ற 4 பேரையும் போலீசார் விரட்டிப்பிடித்து வேனில் ஏற்றி காவல் நிலியம் அழைத்துச்சென்றனர்.

வேடசந்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் காளனம்பட்டி சேர்ந்த மாரிமுத்து, பூத்தாம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன், மாரியம்மாள், சந்தோஷ் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவத்தால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தாக்கப்பட்ட ஓட்டுனர் கார்த்திகேயன் மருத்துவமனையில் அமர்ந்து தன் மீதான தாக்குதல் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?
உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement