செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பார்ப்பிக்யூ சிக்கனில் கண்ணாடி துண்டுகள் வந்தது ஏப்படி ? வாயில் ரத்தத்துடன் வந்து புகார்..! இவ்வளவு கவனக்குறைவா ? அதிகாரி

Aug 20, 2024 07:27:35 AM

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆசிப் ஓட்டலில் இருந்து வீட்டுக்கு பார்சல் வாங்கிச்சென்ற பார்ப்பிக்யூ சிக்கனில் கண்ணாடித் துண்டுகள் கிடந்ததாக புகார் அளித்ததன் எதிரொலியாக ஓட்டலில் ஆய்வு நடத்திய அதிகாரி கெட்டுப்போன சிக்கன், மசாலா பொருட்களை கைப்பற்றி குப்பையில் கொட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் செயல்படும் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டலில் முகமது பாரித் என்பவர், குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி உள்ளார்.

இந்த சிக்கன் உள்ளே உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளன. இது தெரியாமல் சாப்பிட்டதால் வாயில் ரத்தம் கசிந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேரடியாக ஓட்டலுக்குச் சென்று விசாரித்தார்.

தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டில் சமையலறையில் விழுந்து உடைந்ததாகவும், மசாலா பாத்திரத்திற்குள் கண்ணாடி துண்டுகள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே சிக்கனில் தோய்த்து அதனை பொறித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தங்களின் செயலுக்கு ஓட்டல் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டது.

ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து, குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாரித் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆசீப் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.

சமையலறை, உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதி, பால் குளிர்பதன பெட்டி, முன்பே தயாரித்து மசாலா பதப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் கெட்டுப்போன பிரியாணியுடன் கூடிய 6 கிலோ சிக்கன், 2 கிலோ நாள்பட்ட மசாலாப் பொருட்கள், கெட்டுப்போன 50 அவித்த முட்டைகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டன.

மேலும் கத்தரிக்காய் கிரேவி, சமையல் எண்ணெய், மசாலா என 5 உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்.

மேலும் சிக்கனில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவத்திற்காக மேல் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?
உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement