செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

10 நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரியுமாம்...! பவதாரிணி உயிரிழந்தார்..! முற்றியதால் காப்பாற்ற இயலவில்லை

Jan 26, 2024 06:48:45 AM

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி புற்று நோய் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

10 நாட்களுக்கு முன்பே மரணம் குறித்து தெரிந்தாலும் மன உறுதியுடன் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காத சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற அடையாளத்துடன் திரை உலகில் நுழைந்தாலும் தனது மெல்லியகுரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி.

பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்

அழகி படத்தில் பவதாரிணி குரலில் ஒலித்த ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

இளையராஜா, தேவா, சிற்பி, ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார் பவதாரிணி,

பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தியில் 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

2019 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்த பவதாரினி சிறுநீரக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.

இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது.

சனிக்கிழமை நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜா இலங்கை சென்றிந்த நிலையில் மகளின் மரணச்செய்தி அவரை ஆற்றொணா துயரத்துக்குள்ளாக்கி உள்ளது. பவதாரினியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

முன்னதாக பவதாரினிக்கு புற்று நோய் குறித்த தகவல் தெரியவந்ததும் பல மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நோய் முற்றியதால் விரைவில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் கடந்த ஜூலை மாதம் தனது உறவினர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியாக பிறந்த நாள் கொண்டாடி தனது மன உறுதியை வெளிக்காட்டிய பவதாரணிக்கு, 10 நாட்களுக்கு முன்பே மருத்துவர்கள் மரணமடையும் நாளை அறிவித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் ஆயுர்வேத சிகிச்சையாவது கை கொடுத்து விடாதா ? என்ற நம்பிக்கையில் பவதாரினியை இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

புற்று நோய் முற்றிய நிலையில் ஹீமோ தெரபி உள்ளிட்ட எந்த ஒரு சிகிச்சையும் பலனழிக்காமல் அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகின்றது.

காற்றில் கலந்த பவதாரிணி என்ற கீதம் என்றென்றும் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்..!


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement