செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

மனித நேயமற்ற விபத்து.. கொள்ளையர்களை விடுவித்த போலீஸ்..! சட்டத்தில் இடமில்லையாம் ?

Jul 26, 2023 06:42:36 AM

சென்னை செம்பியத்தில் இரு சக்கரவாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு செல்போனையும் திருடிச்சென்ற நபர்கள் மீது போலீசார் திருட்டு வழக்கு பதியாமல் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

சென்னை பெரம்பூர் நெல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரதாபன். திருப்பூரை பூர்வீகமாக கொண்ட இவர் இங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு , வீட்டில் சிலிண்டர் காலியனாதால் , குடும்பத்தினருக்கு உணவு வாங்கி வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் வெளியேச் சென்ற போது எதிரே வந்த இரு சக்கரவாகனம் மோதி கீழே விழுந்தார்

விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டியும், கூட்டாளியும், உயிருக்கு போராடிய சிவபிரதாபனை காப்பாற்றாமல் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இரு தினங்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் விபத்து தொடர்பாக ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்த்து வரும் ரமேஷ், கவுதம் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீஸார், மோட்டார் வாகன சட்டத்தில் மட்டுமே வழக்கு பதிந்துள்ளதாகவும், செல்போனை எடுத்துக்கொண்டு உள்நோக்கத்துடன் சுவிட்ச் ஆஃப் செய்தது குறித்து ஏன் திருட்டு வழக்கு பதிவு செய்யவில்லையென சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மனிதாபிமானத்தோடு ஆம்புலன்ஸ்சுக்கு தெரிவித்திருந்தால் கூட அவர் உயிர் பிழைத்திருப்பாரோ என கண்ணீரோடு வேதனை தெரிவித்தார் அவரது மனைவி ஜெயா.

தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளின் கல்விக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் யாராவது உதவி செய்ய வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் சிவபிரதாபனின் தாய் தனபாக்கியம். 

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சிவபிரதாபனின் சகோதரர் சிவசங்கரன் வலியுறுத்தி உள்ளார்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?
உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement