செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

மரித்த மகனின் வாழ்வை மண்ணில் நீட்டிக்கச் செய்த தாய்..! மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பலருக்கு தானம்!!

Jul 25, 2023 05:48:29 PM

திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த 36 வயது மகன் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த துக்கத்தையும் மீறி அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாயாருக்கு மருத்துவர்களும் உறவினர்களும் நன்றியை ஆறுதலாகக் கூறி தேற்றி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லை விளாகத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தாயார் வெற்றிச் செல்வியுடன் குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

மறுமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக அண்மையில் இவர் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்தார். கடந்த வெள்ளியன்று மணிகண்டன் ஓட்டலில் மதிய உணவு வாங்கிக் கொண்டு வீரபத்திரன் என்ற நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினார்.

கிழந்தாங்கி பாலம் என்ற இடத்தில் சாலையில் இருந்து மணலில் சறுக்கி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மணிகண்டன் உடல் நிலை மோசமானதை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.

இங்கு மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சனிக்கிழமையன்று குவைத்தில் உள்ள அவரது தாயார் வெற்றி செல்விக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக குவைத்தில் இருந்து புறப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார் வெற்றிச்செல்வி.

தலையில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தாலும் மணிகண்டனின் பிற உடலுறுப்புகளை தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் விளக்கிக் கூறினர். இதைக் கேட்ட வெற்றிச்செல்வி, மகன் மணிகண்டனின் உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

வெற்றிச்செல்வியின் ஒப்புதல் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினரும்,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவும் இணைந்து சுமார் 2 மணி நேரம் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதன் பின் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மணிகண்டனின் இதயம் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்டது.

மணிகண்டனின் இதயம் மற்றும் நுரையீரல் திருவாரூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை ஆம்புன்ஸ் மூலமும் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

இதே போன்று மணிகண்டனின் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்கள் மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன அவை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

மணிகண்டனின் கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வேறு இரண்டு பேர் உலகை பார்க்கும் வகையில் தானமாக வழங்கப்பட்டது.

36 வயதில் மகன் அகால மரணமடைந்த துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்து வரும் போதிலும் உயிருக்குப் போராடும் யாரோ முன்பின் தெரியாதவர்களுக்கு உறுப்பு தானம் கொடுக்க சம்மதித்த மணிகண்டனின் தாயார் வெற்றிச்செல்வியை மருத்துவர்களும் உறவினர்களும் நன்றியை ஆறுதலாகக் கூறி தேற்றினர்.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement