செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குற்றவாளிகளுக்கு 7 நாள் கெடு... நிர்பயா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு...!

Feb 05, 2020 07:54:58 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும்  தனித்தனியாக  மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த அவர்களுக்கு 7 நாள்  கெடு விதித்துள்ளது.

நிர்பயா பாலியல் கொலைவழக்கு கைதிகள் 4 பேருக்கும், கடந்த ஒன்றாம் தேதி  தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்து, டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜனவரி 31 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதின்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் (Suresh Kumar Kait) அடுத்த 7 நாட்களுக்குள் சட்டரீதியாக உள்ள அனைத்து நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார். 7 நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அதிகாரிகள் சட்டரீதியாக தமது கடமையைச் செய்யலாம் என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி விசாரணை நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்து விட்ட அவர், முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோர் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திவிட்டதால், அவர்கள் இருவரையும் மட்டுமாவது முதலில் தூக்கில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். அரசியலமைப்புச் சட்ட பிரிவு 21 ன் படி இறுதி மூச்சு நிற்கும் வரை தம்மை காப்பாற்றிக் கொள்ளும் உரிமை இந்த குற்றவாளிகளுக்கு இருப்பதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement