செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை

Jan 13, 2020 05:03:11 PM

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிப்பதற்காக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை.  

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இன்று கூட்டியது.

டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரீய லோக் தள் தலைவர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முக்கியமாக திமுக சார்பில் இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. இதேபோல, இடதுசாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

மேற்குவங்கத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சியும் முறைப்படி அழைப்பு வரவில்லை எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்காமல் தட்டிக்கழித்துவிட்டது.

இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கூட்டத்தை திமுக புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement