சென்னை திருவொற்றியூரில் உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு தவித்த குழந்தையை கதவை உடைத்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
யாஸ்மின் பாத்திமா என்ற பெண், தனது 2 வயது குழந்தையை ஹாலில் விளையாடவிட்டு, படுக்கையறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையை வெளிப்பக்கமாக தாழிட்ட குழந்தை, மீண்டும் திறக்க முடியாமல் தவித்துள்ளது. வாசல் கதவும் உட்பக்கமாக தாழிட்டு இருந்ததால் நடுவில் சிக்கிய குழந்த கதறி அழுதது.
அறைக்குள் சிக்கிக்கொண்ட யாஸ்மின் கொடுத்த தகவலின்பேரில் சென்ற தீயணைப்புத்துறையினர், வாசல் கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று குழந்தையை மீட்டதுடன் யாஸ்மின் இருந்த அறையைத் திறந்து அவரையும் மீட்டனர்.