பிரதமர் மோடியின்ரோட் ஷோவுக்காக தியாகராயநகர், பாண்டிபஜார் சாலைகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 3 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் பயணிக்க உள்ள சாலை முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரோட் ஷோ நடைபெறும் சாலையின் இருபுறமும் ஸ்பீக்கர்களும் கூடுதலாக மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பிரதமரைக் காணும் வகையில் சாலையின் இருமருங்கிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.