செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரூ.4 கோடி பறிமுதல் நெல்லை தேர்தல் ரத்து? அதிகாரிகள் பரபரப்பு தகவல்

Apr 07, 2024 03:15:14 PM

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி சோதனையிட்டனர்.

எஸ்-7 கோச்சில் பயணித்த 3 நபர்கள் எடுத்துச் சென்ற 6 பைகளை சோதனை செய்ததில், உடைகளுக்குள் மறைத்து வைத்து, பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்து போலீசார், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற சூட்கேசுகளில் மொத்தமாக நான்கு கோடி ரூபாய் பணம் இருந்தது.

அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

கைப்பற்றப்பட்டப் பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பணம் கை மாறுவது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது எப்படி ? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நயினார் நாகேந்திரனின் புளு டைமண்ட் ஹோட்டல் ஊழியர்களான சதீஷ், நவீன் மற்றும் அவரது உறவினர் பெருமாள் ஆகிய மூவருக்கும் கொடுக்கப்பட்ட தகவலின் படி சென்னை பசுமைவழிச் சாலை, யானை கவுனி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று சில நபர்களிடமிருந்து சிறு சிறு தொகையாக பணத்தை பெற்று ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அதற்குப் பிறகு இரண்டு புதிய சூட்கேசுகளை வாங்கி அவற்றில் இவர்களின் உடைகளை வைத்து அதற்கு நடுவில் பணத்தை மறைத்து வைத்து பேக்கிங் செய்துள்ளனர்.

மூவரும் நெல்லைக்கு செல்வதற்காக கார் மூலம் கொண்டுச் சென்றால் வாகனத் தணிக்கையில் பிடி விடுவோம் என்பதனால் ரயில் பயணிகள் போல் செல்வதற்கு திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால், மூவருக்குமான டிக்கெட் உறுதி செய்யப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரனின் லெட்டர் பேடில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு EQ - முறையில் டிக்கெட்டை உறுதிப்படுத்த கடிதம் கொடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் பரிந்துரையில் மூன்று பேர் பயணிப்பதால் இது தொடர்பாக தமிழக ரயில்வே காவல்துறையினர் அந்த பட்டியலை வைத்து சந்தேகமடைந்து அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement