செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

Feb 20, 2024 09:53:32 AM

சென்னை கொடுங்கையூரில் தங்களை தாக்கிய திமுக வட்டச் செயலாளரை போலீசார் தப்பிக்கவிட்டதாகக் கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் திக்குமுக்காடிப் போயினர்

சென்னை கொடுங்கையூரில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் பகுதிச் செயலாளர் அஸ்லாம் என்பவரது வீட்டிற்கு இரு பெண்கள் சென்றதாகவும், வீட்டில் உள்ளவர்களிடம் திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன் பெறும் படிவம் என்பதை கொடுத்து நிரப்ப சொன்னதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்லாம் அந்த படிவத்தை கிழித்து போட்டதால், திமுக வட்ட செயலாளர் அரிதாஸ் என்பவர் ஆதரவாளர்களுடன் சென்று தாக்கியதாகவும் , தங்கள் மதத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது

அஸ்லாம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு காவல் நிலையம் வந்த ஹரிதாஸ் ஆதரவாளருக்கும், அஸ்லாம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வட்டச் செயலாளருக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதாக கூறி சாலைமறியலில் ஈடுபட மனிதநேய மக்கள் கட்சியினர் முயல, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட ஹரிதாஸ் காவல் நிலையத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து 50க்கும் மேற்பட்ட ம.ம.க வினர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

தங்களது கூட்டணி கட்சியான திமுகவில் இருந்து கொண்டு இழிவாக பேசிய வட்டச் செயலாளர் ஹரிதாஸ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை விடமாட்டோம் என்று ஆவேசமாயினர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் குவிந்த திமுக மற்றும் மமகவினர் போட்டி மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement