செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தகவல் அறியும் உரிமை மறுக்கப்படுவதாகக்கூறி தேர்தல் பத்திரங்கள் திரட்டும் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

Feb 15, 2024 04:25:19 PM

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்றும் அதை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை பாரத ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை மாற்றி தேர்தல் பத்திர முறையை 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தேர்தல் பத்திர முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் சாசனம் ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுவரை பணமாக்காத தேர்தல் பத்திரங்களை திருப்பி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை விநியோகித்துள்ள பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. முழுமையான விவரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement