செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஜப்பானில் 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இஷிகாவா பகுதியை தாக்கிய சுனாமி

Jan 01, 2024 06:36:54 PM

அடுத்தடுத்து நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டின் கடற்பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது.

ஜப்பானின் மேற்கு கடற்பகுதியில் முதலில் ரிக்டர் அளவையில் 6 புள்ளி 2-ஆக பதிவான நில நடுக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பின்னதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அதில் ஒன்று 7 புள்ளி 6 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாகவும் ஜப்பான் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

90 நிமிட இடைவெளியில் மொத்தம் 21 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், இதனால் இஷிகவா, டொயாமா, நிகாடா போன்ற பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் ஜப்பான் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கடற்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து இஷிகாவா கடற்கரைப் பகுதியில் ஒரு மீட்டர் அளவுக்கு மேல் சுனாமி பேரலை எழுந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடலோர பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உயரமான கட்டிடங்களின் மேல் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. டோக்கியோ - இஷிகாவா இடையிலான புல்லட் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை அறிவித்துள்ள இந்திய தூதரகம், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement