செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

விஜய் ஆண்டனி மகள் எடுத்த விபரீத முடிவு... பிளஸ்-2 மாணவிக்கு மன அழுத்தமா?

Sep 19, 2023 12:04:30 PM

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த விஜய்ஆண்டனியின் மூத்த மகள் மீரா ஓராண்டாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆண்டனி சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிச்சைக்காரன் படம் மூலம் நடிகராகவும் பிரபலமானார். பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வந்த மூத்த மகள் மீரா, திங்களன்று, இரவு உணவிற்குப் பிறகு உறங்கச் செல்வதாக கூறி தனது அறைக்குச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் மகளின் அறைக்கு விஜய்ஆண்டனி சென்ற போது மீரா துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்த விஜய் ஆண்டனி கத்தி கூச்சலிட்டுள்ளார். வீட்டிலிருந்த பணியாளர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றுள்ளார் விஜய் ஆண்டனி.

மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, உடல் பிணக்கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஜய் ஆண்டனி, அவரது மனைவி பாத்திமா இருவரும் சவக்கடங்கில் இருந்த மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், விஜய் ஆண்டனியின் வீட்டிற்குச் சென்று மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மீராவின் வீட்டிற்கு வந்திருந்த சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மீராவிற்கு பள்ளியில் ஏதும் பிரச்னை ஏற்பட்டிருந்ததா? பள்ளி வகுப்பில் சகஜமாக இருந்தாரா? என கேள்விகளை கேட்டனர் போலீஸார். தடயவியல் நிபுணர்கள் நடமாடும் ஆய்வகத்துடன் சென்று தடயங்களை சேகரித்தனர்.

இறகு பந்து போட்டியில் ஆர்வம் கொண்டவரான மீரா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றிருப்பதாகவும், பள்ளிகளில் நடக்கும் சமூக கலாசார நிகழ்வுகளிலும் பங்குகேற்றிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்தத்திற்காக காவிரி மருத்துவமனையில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விடுமுறை நாளில் கூட மீரா தனது தோழிகளை பார்த்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மீராவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும், மீராவின் தோழிகளிடமும் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மீரா கலகலப்பான பெண் எனவும், தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் வாக்கிங் செல்வார் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மீராவின் இறப்பு தகவலறிந்த திரை நட்சத்திரங்கள் பலர் நேரில் சென்று விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement