செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவு.. 2024-ம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பு...!

Sep 10, 2023 03:49:21 PM

டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது. 2024-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், 9 விருந்தினர் நாடுகள், 14 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் தவைர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை வலியுறுத்தும் வகையில் வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளில், இரு அமர்வு கூட்டங்கள் நடைபெற்றன. முதல்நாள் கூட்டம் முடிந்து இரவு உலக தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்தளித்தார்.

டெல்லியில் இன்று காலை சாரல் மழை பெய்துகொண்டிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உலக தலைவர்கள்

ராஜ்காட் வருகை தந்தனர். அவர்களை கதர் சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.

மகாத்மா காந்திக்குப் பிடித்த பஜனை பாடல்களின் பின்னணியில் உலக தலைவர்கள் ஒன்றுகூடி நின்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

ராஜ்காட்டிலிருந்து பிரகதி மைதானம் சென்ற தலைவர்கள் 2-ம் நாள் ஜி20 மாநாட்ல் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரதமர் மோடிக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். பின்னர் 2024-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

மாநாட்டில் முடிவுரை ஆற்றிய பிரதமர், வரும் நவம்பர் மாதம் வரை ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதை சுட்டிக்காட்டினார். ஒட்டு மொத்த உலக வளர்ச்சிக்காக இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்ய, வரும் நவம்பர் இறுதியில் காணொளி மூலம் ஜி20 கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 


Advertisement
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement