புதுச்சேரியில் திருக்கனூர் அருகே கடந்த வாரம் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதை தடுத்த தாய், மகளை சுத்தியலால் தாக்கிய ராஜா என்பவரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.
ஐஆர்பிஎன் போலீசாக வேலை பார்த்து வந்த ராஜா, பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் பணியில் இருந்து நீக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையான அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.