செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பறந்து பறந்து கண்காணிக்கும் ஆளில்லா விமானம்.... ஆபத்தில் உதவும் ட்ரோன்கள்.... பவர் ஃபுல்லாகும் சென்னை காவல்துறை....!

Jun 30, 2023 07:00:48 AM

ஆளில்லா குட்டி விமானம், ஆபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் ட்ரோன், மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களில் சுற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்ட புதிய ட்ரோன் பிரிவு இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை காவல் துறையில் துவங்கப்பட்டுள்ளது.

இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் போலீஸ் யூனிட்டை தொடங்கி உள்ளது சென்னை காவல்துறை.

சென்னை அடையாறில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய ட்ரோன் காவல் மையத்தை திறந்து வைத்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என்ற கனவினை இந்த ட்ரோன் யூனிட் நனவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் ஆளில்லா விமானம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப கேமராக்களை மாற்றிப் பொருத்திக் கொள்ளும் வசதி கொண்ட இந்த விமானம், வான் மற்றும் சாலை மார்க்கமாக தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பின்தொடர்ந்துச் சென்று நேரடி காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் கடல் அலையில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உயிர் காக்கும் கவசத்தை கொண்டுச் சென்று வழங்கும் வகையில் மற்றொரு ட்ரோன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நெரிசலை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலும் ஒரு ட்ரோன் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் போலீஸார்.

இந்த ட்ரோன்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், பழைய குற்றவாளிகளின் புகைபடங்கள் பதிவேற்றப்பட்டு அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

இந்த மூன்று வகையிலும் உள்ள 9 யூனிட்டுகளை இயக்க பொறியியல் பட்டதாரி காவலர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அடையாறில் உள்ள ட்ரோன் காவல் மையத்தில் இருந்தபடி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ட்ரோன்கள் ரோந்து செல்லும் எனவும் போலீஸார் கூறினர்.

இரவு மற்றும் மாலை நேரத்தில் ரோந்துச் செல்வதற்கு இந்த ட்ரோன் யூனிட் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென தெரிவித்தார் காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

நவீன தொழில்நுட்பங்களால் சென்னை காவல்துறை மேலும் பலம்பெற்றிருப்பது, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் என்றும் போலீஸார் குறிப்பிட்டனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement