இந்திய ராணுவத்துடன் இணைந்து விமானப்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டது. போர் போன்ற சூழலை உருவாக்கி வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
போர் பகுதியில் நுழைவதற்கு பயன்படும் பாராசூட்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
நாட்டின் மத்திய பகுதியில் ஒத்திகை நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய விமானப்படை, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளது.