செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

May 29, 2023 06:22:24 AM

சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது சாலையோர பள்ளத்தில் வழக்கி விழுந்து காயமடைந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் 17 வயது சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த தங்களது மகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே, முகப்பேர், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல் சென்று ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது வாய்மொழியாக ஏராளமானோரிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றதால் தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

புகார் வரப்பெற்ற பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் பயன்படுத்திய வாகன எண், அரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அங்கு விசாரித்ததில் மர்ம நபர் பெயர் முகப்பேரைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவ்வப்போது நாள் வாடகைக்கு 500 ரூபாய் கொடுத்து வாகனத்தை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

பகலில் மேடைகச்சேரிகளில் பாடகராகவும், பகுதி நேர ஓட்டுனராகவும் வேலை செய்து வந்த சரவணன், இரவு நேரங்களில் தனது சேட்டைகளை அரங்கேற்றி வந்துள்ளான். எனவே, கொசு மருந்து அடிப்பவர்கள் போல் மாறுவேடத்தில் அவன் வீட்டுக்குச் சென்ற போலீசார், 3 நாட்கள் நோட்டம் விட்டு, சரவணனை மடக்கிப் பிடித்தனர்.

ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு இதே குற்றத்துக்காக கைதாகி சிறை சென்ற சரவணன், ஜாமீனில் வெளியே வந்து சில காலம் அமைதியாக இருந்துள்ளான். பிறகு மீண்டும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரவணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விரட்டியபோது சாலையோர கழிவுநீர் கால்வாயில் விழுந்ததால் இடது கை எலும்பு முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement