உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மதிய உணவுகளை வழங்கினர்.