டெல்லியில், நாய் வளர்ப்பு தொடர்பாக எழுந்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தம் நகரில் 50 வயதுக்காரர் வளர்த்து வரும் நாய், வீட்டின் வெளியே குட்டிப்போட்டது தொடர்பாக, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கமல் மற்றும் அவரது மகன்கள் ரோஹித், ஹிமான்சூ ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை தனது வீட்டின் மாடியிலிருந்து கமல் வீசிய சிசிடிவி காட்சி வெளியானது. இதில், 50 வயதுக்காரர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.