சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை டிரோன் கேமிரா மூலம் படம் பிடித்த பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார்கவுன்சில் வளாகங்களை சிலர் டிரோன் கேமிரா மூலம் படம்பிடிப்பதாக கிடைத்த தகவலின் பேரில்.
அங்கு சென்ற போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் விஜய் ஆண்டனி நடித்து இயக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் படக்குழுவினர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி படப்பிடிப்பை நடத்தியதாகக் கூறி, படக்குழுவினர் நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், டிரோன் கேமிராக்களை பறிமுதல் செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.