புதுடெல்லியில், உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, அங்கு பணியாற்றும் அமெரிக்க பெண் அதிகாரிகள், ஆட்டோ ஓட்டி வந்தனர்.
குண்டு துளைக்காத கவச வாகனங்களில் வலம்வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஆட்டோகளை ஓட்டி சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த 4 பெண் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆட்டோ ஓட்டுவதன் மூலம் மக்களுடன் நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வியலை நன்கு புரிந்துகொள்ள முடிவதாகத் தெரிவித்தனர்.
ஆட்டோமேடிக் கியர் வாகனங்களை மட்டுமே ஓட்டி வந்த நிலையில், முதல்முறையாக, கிளட்சை பிடித்து வாகனங்களை ஓட்டுவதும், சாலைகளில் திரியும் கால்நடைகளை சமாளிப்பதும், பெரும் சவாலாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.