தென்கிழக்கு உக்ரைனில் உள்ள வில்னியன்ஸ்க் நகரில், மகப்பேறு மருத்துவமனையின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளங்குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் ரஷ்ய படைகள் ஏவுகணைகளை ஏவி நடத்திய வான்வழித் தாக்குதலில், மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தாயையும், மருத்துவரையும் மீட்புக்குழுவினர் போராடி மீட்டனர்.