சென்னை திருவொற்றியூரில் நள்ளிரவில் நகை கடையின் பின் பக்க சுவரில் துளையிட்டு திருட முயன்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரை சேர்ந்த அசோக் என்பவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு நகைக்கடை சுவற்றில் துளையிடும் சத்தம் கேட்டு கட்டட உரிமையாளர் ராஜன் வந்ததால், அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடினார்.
தகவலறிந்த அசோக் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளையில் ஈடுபட முயன்ற திருவொற்றியூரை சேர்ந்த முருகன் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.