இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்று காலை ஐதராபாத் நகரில் இருந்து மீண்டும் தொடங்கியது.
நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட், காங்கிரஸ் கட்சியின் இந்த யாத்ரைக்கு ஆதரவு தெரிவித்துடன், ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் நடந்து சென்றார்.
5 வது நாளாக தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.