தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் 2-ஆவது நாளாக விட்டுவிட்டு பெய்துவரும் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் அதிமாக மழைப் பதிவாகியுள்ளது.
சென்னை திரு.வி.க நகரில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டருக்கும் அதிமான பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
திருவொற்றியூரில் 19 சென்டி மீட்டரும்., மணலி மற்றும் குளத்தூரில் தலா 17 சென்டி மீட்டரும்., கத்திவாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் மாதவரத்தில் தலா 16 சென்டி மீட்டரும் மழை பொழிந்துள்ளது.