சென்னை போரூர் அடுத்த சமயபுரம் வழியாக லாரியில் கொண்டு செல்லப்பட்ட டிரான்ஸ்பார்மரில் மின் கம்பி சிக்கியதால் 2 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன.
அதில் ஒரு மின்கம்பம், பின்னால் வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது சாய்ந்தபோது, மின் கம்பி உரசி டேங்கர் லாரியில் தீப்பற்றியது.
அவ்வழியாக சென்றவர்கள் சாலையில் வாகனங்களை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர்.