அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 700 கடைகள் எரிந்து நாசமாகின. தலைநகர் இடாநகரிலுள்ள நாகர்லகன் பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து நிகழ்ந்தது.
2 கடைகளுக்கு பற்றிய தீயை கட்டுப்படுத்த, தீயணைப்புப்படையினரால் முடியாததால், மளமளவென வேகமாக பரவியது.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை.
விபத்துக்கான காரணம் உறுதியாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.