பெங்களூரு - மைசூரு இடையே இயக்கப்படும் திப்பு விரைவு ரயிலின் பெயர், 'உடையார் விரைவு ரயில்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1980ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த ரயிலின் பெயரை மாற்றம் செய்யக்கோரி மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த ரயிலிற்கு மைசூரு அரச குடும்பத்தின் பெயரை சூட்டி ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.