தென் அமெரிக்க நாடான பெருவில் 328 அடி உயர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அப்ரா மலகா செக்டரில் பயணித்த சுற்றுலா பயணிகளின் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த மீட்புப் படை வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.