கனடாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்நாடு முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளார்.
கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் (Antoine Moses), தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க துவங்கி, தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த மோசஸ், இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்.