பொருளாதார நெருக்கடிகளுக்கு நீண்டகால கொள்கைகளை வகுக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை என்று உலக வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் போதுமான அளவில் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.