சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கும் போராட்டம் தொடர்ந்த நிலையில் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.
அவருக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா சிங்கப்பூர் அரசு வழங்கியிருந்த நிலையில் தற்போது மேலும் 14 நாட்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.