நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று சோனியா காந்தி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை ஆஜரான சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்று ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சோனியா காந்தி ஆஜராவதையொட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என முக்கிய இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.