பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண வேண்டும் என்ற, காது கேளாத, வாய் பேச முடியாத ஓவியக்கலைஞரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமருடன் அந்த இளைஞரை சந்திக்க வைத்த அசாம் முதலமைச்சர், அந்த கலைஞனின் கனவை நிறைவேற்றினார்.
இந்த சந்திப்பின் போது தாம் வரைந்த ஓவியத்தை பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்த இளைஞர் வழங்கினார். அவருக்கு பிரதமர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.