குடியரசுத் தலைவர் தேர்தலில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 126 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி, பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 22 பேரும், மத்திய பிரதேசத்தில் 19 பேரும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். யஸ்வந்த் சின்ஹாவுக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள 81 எம்.எல்.ஏ.க்களில் 9 பேரின் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
அதேநேரத்தில் முர்முவுக்கு அவரது சொந்தமான மாநிலமான ஒடிசாவில் மொத்தமுள்ள 147 எம்.எல்.ஏ.க்களில் , 137 பேரின் வாக்குகள் கிடைத்துள்ளன. எம்.பி.க்களை பொறுத்தவரையில், 17 பேர் அணி மாறி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.