நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
மக்களவையில் காலியாக இருந்த இடங்களுக்கு, அண்மையில் தேர்வு செய்யப்பட்ட 2 பாஜக எம்.பி.க்கள் உள்பட 4 பேர் பதவியேற்றனர்.
அதேபோல், மாநிலங்களைவையில் திமுக எம்பிக்கள் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றனர்.
இதனிடையே, பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.