செஸ் ஒலிம்பியாட் தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்க பலகையின் வர்ணம் பூசப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 28ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது.
சர்வதேசம் அளவிலான வீரர்கள் தொடரில் கலந்து கொள்ள உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியட் போட்டியை பிரபலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை நேப்பியர் மேம்பாலம் சதுரங்க பலகையின் வர்ணத்தில் மிளிர்கிறது.