இலங்கையில் போராட்டங்கள் வலுத்துள்ள சூழலில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாட்டை விட்டு அண்டை நாடான மாலத்தீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் இன்று சபாநாயகரிடம் அளிக்கப்பட உள்ளது. ஆன்டனோவ் 32 என்ற ராணுவ விமானம் மூலம் கோத்தபயா ராஜபக்சே அவர் மனைவி பாதுகாவலர் உள்பட நான்கு பேர் தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்கு சில மணி நேரம் முன்பாக அங்கிருந்து தப்பிச் சென்ற கோத்தபயா ராஜபக்சே கடற்படைக் கப்பலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.