பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் கன மழைக்கு மத்தியில் தொழிலாளர்கள் தார்சாலை அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பொதுப்பணித்துறையை சேர்ந்த நான்கு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சப்பேவால் தொகுதியில் உள்ள நங்கல் கிலாடியா மற்றும் ஷெர்பூர் கிராமத்தை இணைக்கும் சாலையில் தேங்கிகொண்டிருந்த மழை நீருடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.