செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சுற்றுலாத் தலம்போல மாறிய இலங்கை அதிபர் மாளிகை.!

Jul 10, 2022 03:56:24 PM

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடியுள்ள நிலையில், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலம்போல மாளிகையின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுச் செல்வதுடன் அமர்ந்து உணவருந்திச் செல்கின்றனர். 

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் சினத்துக்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் முற்றிலும் வெளியேறிவிட்டனர். இதனால் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் அதிபர் மாளிகை உள்ளது. இந்நிலையில் கொழும்பு நகர மக்கள் குடும்பத்துடன் வந்து சுற்றுலாத் தலம்போல் அதிபர் மாளிகையை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து நுழைந்தபோதும் அதிபர் மாளிகையில் உள்ள படங்கள், ஓவியங்கள், மீன்தொட்டிகள் உள்ளிட்ட எவற்றையும் உடைக்கவோ, நொறுக்கவோ, தீவைக்கவோ இல்லை என்பது மக்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. இவற்றையும் பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

அதிபர் மாளிகைத் தாழ்வாரங்களில் உள்ள ஓடுகள், சன்னல் கண்ணாடிகள், கார்களையும் மக்கள் உடைக்கவில்லை. அவற்றையும் ஆர்வத்துடனும் வியப்புடனும் பொதுமக்கள் பொறுமையாகப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

அதிபர் மாளிகையின் பல்வேறு அறைகளில் கட்டில், படுக்கை, தொலைக்காட்சிப் பெட்டிகள், நிலைக்கண்ணாடிகளும் அப்படியே உள்ளன. பெரிய அரங்குகளில் உள்ள இருக்கைகள், நாற்காலிகள் மக்கள் அமர்ந்து செல்கின்றனர். பஞ்சு மெத்தை போன்றிருக்கும் சோபாக்களில் சிறார்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர்.

குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த உணவை அதிபர் மாளிகைத் தோட்டத்தில் அமர்ந்து உண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

மாளிகையின் பல்வேறு பகுதிகளிலும் பல கோணங்களில் நின்று படமெடுத்துக் கொள்கின்றனர். நேற்றைய புரட்சியின்போது, ஆர்வ மிகுதியால், இளைஞர்கள் துள்ளிக் குதித்துக் குளித்த நீச்சல் குளம், இப்போது, ஆரவாரமின்றி, அமைதியாகக் காட்சியளிக்கிறது. அதன் முன்பு நின்று பெண்கள் படம்பிடித்துச் செல்கின்றனர்.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement