செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இலங்கையில் பதற்றம் : அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகல்.. அடுத்த அதிபர் யார்?

Jul 10, 2022 06:21:08 AM

இலங்கையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி கோத்தபய விலகுகிறார். தற்காலிக அதிபராக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தன செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்புகள், பொது மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பாதுகாப்பு படையினர் விரட்டினர்.

அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபயா ஆம்புலன்சில் தப்பிச் செல்வதாக தகவல் பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

விடிய விடிய அதிபர் மாளிகையிலேயே இருந்து அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் நீச்சல்குளத்தில் நீச்சலடித்துக் கொண்டும் இருந்தனர்.

அதிபரின் படுக்கையில் படுத்தவாறே கிளர்ச்சியாளர் ஒருவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் வீட்டிற்கு சென்ற போராட்டக்காரர்கள் அங்கும் சூறையாடி தீவைத்தனர்.

இதனிடையே, கோத்தபயா தன் குடும்பத்தினருடன் விமானம் மூலம் தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

கொழும்பு துறைமுகத்தில் பயணப் பைகளை கப்பலில் ஏற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

அதேநேரம் கடந்த வெள்ளிக்கிழமை இரவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபயா தன் குடும்பத்தினருடன் வெளியேறியதாகவும், பாதுகாப்பான இடத்தில் ராணுவத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவியில் இருந்து 13 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தனே தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி அமைய வழிவகுக்கும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரனில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

ரணில் விகரமசிங்கே அமைச்சரவையில் முக்கியத் துறைகளான தொழில் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

அடுத்த அதிபரை தேர்வு செய்யும் வரை சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தனே தற்காலிக அதிபராக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement