செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை.. பிரச்சாரத்தின்போது பயங்கரம்!

Jul 08, 2022 07:13:05 PM

தேர்தல் பரப்புரையின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் Liberal Democratic கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே மத்திய ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெகுசிலரே கூடியிருந்த நிலையில், திடீரென பின்னால் இருந்து வந்த ஒருவர், மிக அருகில் இருந்து ஷின்சோ அபேவை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுய நினைவை இழந்த ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது.

உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபே. 67 வயதான ஷின்சோ அபே உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறிய நிலையில் ஜப்பான் நேரப்படி மாலை 5.03 மணிக்கு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மிகவும் இக்கட்டான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஷின்சோ அபேவுக்கு 100 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்பட்டதாகவும், துப்பாக்கி குண்டு இதயத்தின் ஆழம் வரை பாய்ந்ததால் அவர் இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஷின்சோ அபேவை சுட்ட யமாகாமி டெட்சூயா ((Yamagami Tetsuya)) என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் கடற் பாதுகாப்பு படையில் பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார். ஷின்சோ அபேயின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சுட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருமுறை பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
முதலில் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்த அபே, உடல் நலக்குறைவினால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் சனிக்கிழமை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 


Advertisement
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்
சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது


Advertisement