செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தேசிய செயற்குழு கூட்டம் : ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜக தீர்மானம்..!

Jul 03, 2022 08:05:43 PM

தாங்கள் ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அதில், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும், அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாஜக பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமீப ஆண்டுகளாக பாஜக விரைவான வளர்ச்சியை பெற்று வருவதாகவும், தெலங்கானா, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் தொண்டர்கள் கடுமையாக போராடுவதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான் என்றும் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அராஜகத்தை பரப்புவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தாங்கள் ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் ஏழை, எளிய, பழங்குடியினர் போன்றவர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால், அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நாடு முழுவதும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதிலும், சொத்துக்களை தங்கள் பெயரில் வைத்திருப்பதிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக அண்மையில் ஒரு அறிக்கை வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement