ராஜஸ்தானில் தையல்காரர் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களை ஜெய்ப்பூர் தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் பத்து நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசியப் புலனாய்வு முகமைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்துச் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்ல வெளியே அழைத்துவந்தபோது, சூழ்ந்துகொண்ட வழக்கறிஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களை மீட்ட காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டுசென்றனர்.