புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை பறித்து சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டிற்கு காவி வேட்டி அணிந்து சாமியார் போல் வந்த இருவர், உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய தங்க நகைகளை மந்திரித்தால் சரியாகிவிடும் என கூறி அவரின் 2 சவரன் தங்க வளையல், கம்மல்-ஐ வாங்கியுள்ளனர்.
மந்திரம் சொல்வது போல் நடித்து அங்கிருந்து நகைகளுடன் தப்பிச்சென்றுள்ளனர். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.